புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2014
>> Tuesday, December 31, 2013
HAPPY NEW YEAR.
WISH YOU JOY, PEACE, LOVE AND HAPPINESS.
LET'S CELEBRATE!.

என்றென்றும் புன்னகை – விமர்சனம்
>> Saturday, December 28, 2013
ஜீவாவுக்கு நேரெதிரான குணத்துடன், எந்நேரமும் பெண்களை ஜொல்லுவிட்டுத் திரியும் வினய், கலகலப்புக்கு பஞ்சமில்லாத நண்பனாக சந்தானம். இந்த நட்புக்கூட்டணி “இனிமேல் கல்யாணமே பண்ணிக்கிறதில்லை” என சத்தியம் எடுக்கிறார்கள். திடீரென, ஜீவா தவிர்ந்த இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இதனால், நண்பர்களிடம் இருந்து விலகுகிறார் ஜீவா.
நண்பர்களை பிரிந்த ஜீவா - திருமணம் செய்து கொண்டாரா? பிரிந்த நண்பர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் கதை. இதனை, காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இவர்கள் விளம்பரம் செய்து கொடுக்க வேண்டிய கம்பனி ஒன்றின் முதலாளியின் பி.ஏ.வாக த்ரிஷா அறிமுகமாகின்றார். அம்மணி 15 வருஷத்துக்கு மேலா நடிக்கிறார். இப்படத்தில் செம கியூட் ! வெரி குட் பெர்பார்மான்ஸ்!. விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் பாதியளவை நடிப்பில் கொண்டு வருகிறார். அழகான ஓவியமாக கொட்டும் ஐஸ் மத்தியில் கூலாக நடக்கிறார். அவருக்கு குளிருதோ, இல்லையோ, பார்க்குற நமக்கு நடுங்குது. விளம்பர மாடலாக ஆன்ட்ரியா வருகிறார். சூடாக ஒரு ஆட்டம் போட்டு விட்டு போகிறார். நடிப்புக்கு ஏதுமில்லை.
நடிப்பில் ஸ்கோர் செய்யக்கூடிய கதையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார் ஜீவா. கல்லாக இருப்பவருக்குள், காதல் துளிர்ப்பதை அழகாக நடித்திருக்கிறார். வினய், சாக்லெட் பாயாக வருகிறார்.
படத்தை தூக்கி நிறுத்துபவர் சந்தானம். அவரது, டைமிங் காமெடியும், உடல் மொழியும் தியேட்டர்களில் சிரிப்பு வெடிகள். ஆங்காங்கே, இரட்டை அர்த்தங்கள், ஆபாச செய்கைகள் என பிரமாதப்படுத்துகிறார். பின்பாதியில், காமெடிக்கு பஞ்சம் இருக்கக் கூடாது என்பதற்காக இடையிடையே சந்தானம்-மனைவிக்கு இடையிலான காமெடி பஞ்ச் கலகலப்பு. குடித்து விட்டு வீட்டு ஹாலில் போடும் ரகளை செம. 5 நிமிடம் நம்மை விடாமல் சிரிக்க வைத்தது.
பாராட்ட வேண்டிய இருவர் ஒளிப்பதிவாளர் மதி மற்றும் கலை இயக்குனர். ஹிந்திப் படங்கள் போல கலர்புள் ட்ரீட். இது தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஊட்டி, சென்னை, சுவிஸ் என காமெரா ட்ராவல் ஆகும் இடங்கள் எல்லாம் அருமை. ஜீவாவின் வீடு, ஆபீஷ் அமைப்பு பிரமாதம்.
காதல் கதைக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம். ஆறு பாடல்கள், ஹாரிஸ் சொதப்பிட்டார்.
நண்பர்களுக்கிடையேயான காமெடி நிகழ்வுகளை நூலாக வைத்து லவ், சென்டிமென்ட், ப்ரெண்ட்ஸிப், காமெடி என அழகான திரைக்கதையை கோர்த்திருக்கிறார் இயக்குனர். திருப்தியா ஒரு கலர்புள் படம். ரொம்ப சிம்பிளான கதை. அதைக் கொடுத்த விதம் அருமை.
Read more...
பிரியாணி சினிமா விமர்சனம்
>> Friday, December 27, 2013
கொலைச்செய்யப்படும் செல்வந்தரின் கொலையில் அப்பாவிகள் இருவர் மாட்டிக்கொள்கிறார்கள். மாட்டிய இவர்கள் இந்த கொலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
கார்த்தியும் பிரேம்ஜியும் ஆம்பூரில் நடக்கும் நிறுவனத்தின் ஷோரூம் கிளை திறப்புவிழாவுக்கு வருகிறார்கள். அந்த நிகழ்வில் தன்னுடைய துடிப்பான நடவடிக்கையால் அந்த நிறுவனத்தை துவக்கிவைக்க வரும் நெம்பர் ஒன் செல்வந்தர் நாசருக்கு கார்த்திகை பிடித்துவிடுகிறது.
இதற்கிடையில் ஆம்பூரில் இருந்து சென்னை கிளம்பு வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தேடி அலைந்து ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார்கள். அங்கு பிரியாணி சாப்பிட வரும் மாண்டி தாக்கார்(மாயா) அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்து அவருக்கு உதவிசெய்து அவருடைய ரூமுக்கே சென்று குடித்து கும்மாளமடிக்கிறார்கள்.
விடிந்து தெளிந்து பார்த்தபின்தான் தெரிகிறது. அங்கு ஒரு கொலை நடந்திருப்பது. அதுவும் கொலைசெய்யப்பட்டிருப்பது நாசர் தான். இந்த கொலையில் கார்த்தியும் பிரேமும் தேவையில்லாமல் மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த கொலையில் இருந்து எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறார். இந்த கொலையில் உண்மையான பிண்ணனி என்ன. அவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார். என்பதுதான் பிரியாணியின் மீதிக்கதை.
நாசர் கொலை எப்படி நடக்கிறது. உண்மையில் குற்றவாளி யார். கார்த்தி-ஹன்சிகா காதல் என்னவாயிற்று போன்ற விஷயங்களை வெள்ளித்திரையில் காண்க. Read more...
How a Son / Daughter thinks of his/her father at different age.....
>> Tuesday, December 10, 2013
At 6 years....:My Daddy knows everything.
At 10 years.....: My Daddy is good but he is short tempered.
At 12years....: My Daddy was nice to me when I was young.
At 16 years.....: My Daddy is not in line with the current times. Frankly he does not know anything.
At 18 years...: My Daddy is becoming increasingly cranky and unreasonable.
At 20 years....: Oh! It is becoming difficult to tolerate Daddy! Wonder how Mother puts up with him!
At 25 years...: Daddy is objecting to everything.. Don't know when will he understand the world.
At 30 years...: It is becoming difficult to manage my son! I used to be so scared of my Dad when I was young...
At 40 years...: Daddy brought me up with so much discipline.. I wonder how he managed to handle the younger generation!..
At 45 years....: I am baffled as to how my Daddy brought us up..
At 50 years...: My Daddy faced so many hardship to bring us up...(we were 3 brothers and 2 sisters) I am unable to manage a single child!
At 55 years...: My Daddy was so far sighted and planned so many things for us. Even at this old age, he is able to control things. He is one of his kind and unique.
At 60 years...: ' My Daddy was great!
Don't take so many years.....Realize it in time! Read more...
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க 2...!!
>> Friday, December 06, 2013
The bank officer says the bank will need some kind of security for the loan, so the blonde hands over the keys to a new Mercedes Benz.
The car is parked on the street in front of the bank, she has the title and everything checks out. The bank agrees to accept the car collateral for the loan.
The bank's president and its officers all enjoy a good laugh at the blond for using a $110,000 Benz as collateral against a $5,000 loan.
An employee of the bank then proceeds to drive the Benz into the bank's underground garage and parks it there. Two weeks later, the blonde returns, repays the $5,000 and the interest, which comes to $15.41.
The loan officer says, "Miss, we are very happy to have had your business, and this transaction has worked out very nicely, but we are a little puzzled. While you were away, we checked you out and found that you are a multimillionaire.
What puzzles us is, why would you bother to borrow $5,000?"
The blonde replies, "Where else in New York City can I park my Car for two weeks for only $15.41 and expect it to be there when I return?"
Read more...
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...!!
>> Tuesday, July 16, 2013
பஞ்சாபி தினமும் சப்பாத்தி தான் லஞ்சுக்கு...............
மலையாளி தினமும் நேந்திரம் பழமும் புட்டும் தான் லஞ்சுக்கு...............
ஆந்திராகாரு தினமும் கொங்குரா ரைஸ் தான் லஞ்சுக்கு...............
நம்ம மிஸ்டர் Xக்கு எப்பவும் பருப்பு சாதம் தான் லஞ்சுக்கு.................
இது அவங்களுக்கு ரொம்ப வேதனையாப் போச்சு. என்னடா நாம தினமும் கஷ்டப்பட்டு வேலை பாக்குறோம். ஆனா தினுசு தினுசா கொடுக்காம தினமும் ஒரே மாதிரியே சாப்பாடு கொடுக்கறாங்களேன்னு ஒரே வருத்தம். ஒரு நாள் லஞ்ச் டைம்ல எல்லொரும் இதைப் பத்தி பேசிகிட்டு இருக்கும் போது இனி நாளைக்கும் இதே சாப்பாடு இருந்தா நாம சூசைட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.
அடுத்த நாள் லஞ்ச் அவர்ல டிபன் பாக் ஸ் திறந்து பாத்தா திரும்பவும் எல்லாருக்கும் அதே சாப்பாடு. அதனால முன்னாடியே முடிவு பண்ணின மாதிரி காரணத்தை ஒரு லெட்டர்ல எழுதி வச்சுட்டு எல்லொரும் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. அவங்க நாலு பேரும் ஒண்ணா சூசைட் பண்ணிக்கிடதுனால எல்லாரோட பாடியையும் ஒரே இடத்துல வச்சுருக்கு. அவங்க அவங்க மனைவி எல்லாம் அந்த லெட்டர படிச்சுட்டு ஒரே அழுகை. என்கிட்ட சொல்லி இருந்தா நான் வித விதமா சமைச்சுக் கொடுத்துருப்பேனே அப்படின்னு எல்லாம் அழுகை. ஆனா நம்ம மிஸ்டர் X மனைவி மட்டும் வெறிச்சுப் போய் உக்காந்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஒருத்தர் போய் அவர் மனைவிகிட்ட கேட்டாங்க.........
"ஏங்க இப்படி இருக்கிங்க? ஒரு குழப்பத்துல இருக்கிற மாதிரி இருக்கேன்னு" கேட்டார்.
அதுக்கு மிஸ்டர் X மனைவி சொன்னாராம்...............
.
.
.
.
.
.
.
.
.
.
.
"இவர் எதுக்கு இந்த விஷயத்துக்காக சூசைட் பண்ணிக்கிட்டாருனு புரியல. ஏன்னா தினமும் சமைக்கிறதே அவருதானே".
Read more...
இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வென்றது.
>> Tuesday, December 15, 2009
இலங்கைக்கு எதிரான பரபரப்பான இன்றைய மேட்ச்சில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வென்றது.
முன்னதாக இந்தியா 414/7 என்ற கடினமான இலக்கை வைத்தது. அற்புதமாக விளையாடிய இலங்கைக்கு கடைசி ஓவரில் 6 பந்துக்கு 11 ரன் தேவைப்பட்டது. கடுமையாக போராடி 411/8க்கு வீழ்ந்தது.
நடிகை ஜெயபிரதா தற்கொலை !!!
>> Monday, May 11, 2009
சமாஜ்வாடி பார்ட்டி பொதுச் செயலாளர் அமர்சிங் ஞாயிறன்று அளித்த பேட்டியில் " இந்த தேர்தலில் தோல்வியுற்றால், நடிகையும், ராம்பூர் தொகுதி வேட்பாளருமான ஜெயபிரதா தற்கொலை செய்துக்கொள்ளுவார்" எனக் கூறியுள்ளார்.
செய்தி: யாகூ.
http://in.news.yahoo.com/139/20090511/808/tnl-jayaprada-might-commit-suicide-if-lo.html
பெங்களூரில் வேலைவாய்ப்பு (Senior .NET Developers )
>> Friday, May 08, 2009
உங்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ, இது உதவுமென்றால், இதோ............ அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....
Position : Senior .NET Developers
Experience:4 - 6 Years
கம்பெனி: I SENSE INDIA OSL
வெப்சைட்: http://www.isense.nl, http://www.indiaosl.nl
முகவரி: 188/1, 6th Main, Defence Colony,
Indiranagar,
Bangalore - 560038
தொடர்புகொள்ள வேண்டிய நபர்: Bhagya Appachu
மெயில் ஐடி: b.appachu@indiaosl.nl
போன்: 91-080-41481250
பெங்களூரில் வேலைவாய்ப்பு (Technical Lead C# / .NET )
>> Thursday, May 07, 2009
உங்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ, இது உதவுமென்றால், இதோ............ அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....
Position : Technical Lead - C# / .Net Experience:6 - 11 Years
கம்பெனி: Encora Inc
வெப்சைட்: http://www.encorainc.com
முகவரி: ACR Towers, IV & V Floor,
No 32, Residency Road,
Bangalore - 560025
தொடர்புகொள்ள வேண்டிய நபர்: Laxmi Anand
மெயில் ஐடி: laxmi.anand@encorainc.com
போன்: 91-080-66953434
பெங்களூரில் வேலைவாய்ப்பு (.NET LEEDS / Technical Lead )
>> Wednesday, April 29, 2009
எனது நண்பன் கமுக்கமா போய் இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணி, ஆபர் லெட்டெரோடே சற்று முன் போன் செய்து விஷயத்தை சொன்னான். இந்த Recession-லெ ஆஃப்பரா என்ற சந்தேகத்தோடே கேட்டால் அவன் SMS செய்த விபரம் கீழே...
உங்களுக்கோ அல்லது நண்பருக்கோ, இது உதவுமென்றால், இதோ............ HR தேவதையின் பெயர், போன் நம்பர், இமெயில் ஐடி எல்லாம் இருக்கு... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
Position: .NET Technical Lead
Experience: 6 to 10 Yrs
Location: Bangalore
Company Name:Nuware Systems Pvt Ltd
Website:https://www.nuware.com
HR Executive Name:Ms.Madhulatha
Address:Nuware Systems Pvt Ltd
4th Floor
HM Geneva House,
Cunningham Road
Bangalore,
Karnataka,
INDIA 560052
Email Address:madhulatha.avisa@nuware.com
Telephone:91-080-41238853
அவன் திங்கள்கிழமை இண்டெர்வியூ சென்று வந்த விபரம்....
Position : Senior .NET Architect/Tech Lead
Experience:4 - 9 Years
Company Name:Emqos Pvt Ltd
Website:http://duncansolutions.com
HR Executive Name:Ms.Rekha
Telephone:91-80-26426020
பெங்களூரில் நாளை விடுமுறை...
>> Wednesday, April 22, 2009
பெங்களூரில் நாளை விடுமுறை...
எதற்க்கு?
ஓட்டு போடத்தான்..
பெங்களூர் பாராளுமன்றத் தொகுதிகள் 4லிலும் நாளை ஓட்டுப்பதிவு.
களம்காணும் அரசியல் [b]மாமேதைகள்[/b] வெற்றி பெற வாழ்த்துக்கள்...
புரயோசமான காரியம் மச்சி.!!
>> Saturday, May 05, 2007
நமது வலைப்பூ நண்பர் தமிழ்பித்தன் ஒரு புரயோசமான காரியம் செய்துள்ளார்...:P
அதனைக் காண இங்கே அமுக்கவும்....http://biththan.blogspot.com/2007/05/back-up.html
புரயோசமான காரியம் தமிழ்பித்தன் மச்சி.! உனக்கு மூளை இருக்கு மச்சி.. ஒத்துக்கிறேன்.
பின் குறிப்பு : இது ஒரு ஜல்லி பதிவு.. :P
Chicken பிரியரா நீங்கள்?
>> Thursday, January 11, 2007
ஹி, ஹி நான் கொஞ்சம் சிக்கன் பிரியனுங்க அதான்...
நீங்களும் அப்படிதான்னா இங்கே அமுக்குங்க...
http://oosi.blogspot.com/2006/12/chicken.html
கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 02
>> Monday, December 11, 2006
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
அதில் கலந்துக்கொள்ளப் போகின்றீர்களா, இது உங்களுக்கு தான்.
உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்? என்று சிந்தியுங்கள்.
நீங்க அமைச்சராக...... உங்களின் வாக்குறுதியில்...
நான் அமைச்சரானால்... சென்னைக்கும், செவ்வாய் கிரகணத்துக்கும் இடையில் பறக்கும் ரயில் விடுவேன்....
கூவம் ஆற்றின் இரண்டு பக்கமும் மல்லிகைத் தோட்டங்களை அமைத்து..... கம,கம சென்னை ஆக்குவேன்....
சென்னை மக்கள் பயணம் செய்ய குளு,குளு வசதியுள்ள பஸ் விடுவேன்.....
தமிழை செவ்வாய் கிரகணத்தின் ஆட்சி மொழி ஆக்குவேண்...
அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை மாணவர்களை, செவ்வாய் கிரகணத்துக்கு சுற்றுலா அழைத்து செல்வேன்......
குடும்ப அரசியலை நீக்குவேன்...
லஞ்சத்தையும், ஜாதியையும் ஒழித்துக்கட்டுவேன்...
என்று சும்மா புருடா விடாமல்...உங்களின் வாக்குறுதிகள் ஆக்கப்பூர்வமானதாவே இருக்கட்டும்....
**************
சரி சரி வைரமுத்துவின்... வைர வரிகளைப் பார்க்கலாம் வாங்க....
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வெண்டும் (3)
சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேற்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண் மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
பழமொழி கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு
(புத்தம் புது பூமி...)
யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் யேந்தி யேந்தி வந்து விழ வேண்டும்
போனவை அவை போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லைக் கொடுகள் அவை தேரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்
(புத்தம் புது பூமி...)
**********
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503
மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.
கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 01
>> Friday, December 08, 2006
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
பொதுவாகவே இப்படி ஏதாவது கட்டுரைப்போட்டி என்றால்... நாமெல்லாம் என்ன செய்வோம்... நம்ம அண்ணன்மார்களிடமோ, அக்காக்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ, கெஞ்சி கூத்தாடி, அந்த தலைப்பில் எழுதி தரச்சொல்லி, அதை வாங்கி மனப்பாடம் செய்து எழுதுவோம்...
சிலர் காலேஜில் படிப்பவர்களிடம் இருக்கும் கட்டுரைகள் என்ற புத்தகங்களில் இருந்து முழுசாக உருகிக்கொள்ளுவார்கள்...
கொடுமை என்னவென்றால் சிலர் "பிட்" கூட அடிப்பார்கள், இன்னும் சிலரோ "ஈ" அடிச்சான் காப்பி அடிப்பார்கள்.....
ஆனால் வெகு சிலர் மட்டும் புத்தகங்கள், பத்திரிக்கைகளை படித்தும், தொலைக்காட்சியை பார்த்தும், வானொலியில் கேட்டும், புரபஷர்கள், ஆசிரியர்கள், நாலும் தெரிந்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள் இப்படி சிலரிடம் விவாதித்தோ... கிடைத்த சில பாயிண்டகளை வைத்துக்கொண்டு சொந்தமாக, சிந்தித்து எழுதி வெற்றி பெறுவார்கள்.....
அடுத்தவர்களின் கருத்துக்கள் எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும் அதை பின்பற்றாமல், தங்களின் சொந்த நடையில் எழுதி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்...
************
நண்பர் லக்கி லுக்குடன் பேசிக்கொன்டிருக்கும் போது..... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்றம்/அவை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளாது குறித்து சில வித்தியாசமான கருத்தை சொன்னார்.... என்னை சிந்திக்க வைத்த சில கருத்துக்கள்....
1. வெறுமனே சட்ட சபைக்கு போய் பாக்கு மென்று விட்டு வந்தால் எந்த பிரயோசனமும் இல்லை.
2. ஒரு சிறந்த எம்.எல்.ஏ. மக்களோடு பழகி அவர்களது பிரச்சினைகளை அறிந்தால் மட்டுமே அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியும். இதற்காக சட்டமன்றத்துக்கு சென்று வாதம் புரிய தான் வேண்டும் என்பதில்லை.
3. நான் சட்டமன்றத்துக்கு போவது தவறென்றோ, போகாதது நல்லதென்றோ சொல்லவில்லை. சட்டமன்றத்துக்கு போகாதது பெரிய குற்றமெல்லாம் இல்லை என்றே சொல்லவருகிறேன்.
4. வாரத்துக்கு ஒரு முறை எம்.எல்.ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து மனுக்கள் வாங்க வேண்டும். தொகுதியில் சிறு சிறு பிரச்சினைகளோ அல்லது ஏதேனும் பெரிய விபத்துக்களோ ஏற்பட்டால் ஸ்பாட்டுக்கு உடனே செல்ல வேண்டும். அதிகாரிகளுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். தன் தொகுதியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.
5. சட்டசபைக்குப் போகவில்லையென்றால் கவனஈர்ப்பு தீர்மானம், உரிமை மீறல் பிரச்னை, வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கல், கேள்வி/பதில் --- இவற்றில் பங்கேற்பது/பதிலளிப்பது இல்லமல் போய்விடும். மேலும் பங்களிப்பு முற்றிலும் இருக்காது.
************
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503
மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.
வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
>> Tuesday, December 05, 2006
தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.
கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தலைப்பு: உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?
கட்டுரை A4 அளவிலான தாளில் 5 முதல் 8 பக்கங்கள் வரை இருக்கலாம்.
போட்டியில் பங்கேற்போர் ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், விலாசம், பிறந்த தேதி, ஆணா-பெண்ணா, படிக்கும்/படித்த துறை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கட்டுரையோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மார்ச் 31, 2007
வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் தேதி : ஏப்ரல் 14, 2007 (தமிழ்ப் புத்தாண்டு)
பரிசுகள்:
முதலாவது: ரூ25,000
இரண்டாவது: ரூ10,000
மூன்றாவது: ரூ5,000
ஆறுதல் பரிசுகள்: தலா ரூ2,000 (20 பேருக்கு)
அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்:
Tamilnadutalk.com
No. 67 - 5th Lane,
Chennai-600 039
தொலைபேசி இலக்கம்: 044-45561101
இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.
http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503
மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.
கலாநிதி மாறனை வாழ்த்துகின்றேன்
>> Tuesday, November 28, 2006
எனது நண்பர் ஆனந்துடன் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது, எங்களின் அரட்டையிலிருந்து சில துளிகள்....
செய்தி : தற்போது வெளியாகியுள்ள Forbes இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 20 ம் இடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்கள்.
கலாநிதி சிறந்த பணக்காரராக வந்தது எனக்கு மிகப் பெருமைதான் ஆனால் அவரது துறைதான் சற்று இடிக்கிறது.
இதுவே அவர் மிட்டல் மாதிரி ஸ்டீல் துறையிலோ, அசீம் பிரேம்ஜீ மாதிரி சாப்ட்வேர் துறையிலோ, அம்பாணி மாதிரி பெட்ரோ கெமிகல் துறையிலோ வளர்ந்திருந்தால் எந்த கேள்வியும் எங்குமே வந்திருக்காது
மற்ற துறைக்கும் மீடியாவிற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற துறைக்கு மக்களின் சிந்தனைகளை, கருத்தை மாற்றும் சக்தி இல்லை, மீடியாவிற்கு அது உண்டு
அரசியல் சார்ந்தவர்கள் மீடியாவை கையில் வைத்திருக்கக்கூடாது என்ற தார்மீகம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புஷ் எந்த டி.வியையும் நடத்த வில்லை, டோனி ப்ளேர் எந்த பத்திரிக்கையையும் நடத்தவில்லை.
இந்த கட்சிக்காரர்கள் கையில் மீடியா என்ற தவறான முன் உதாரணம் நம் அண்டை மாநிலங்களில் கூட கிடையாது.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பத்திரிக்கைத்துறை வர்ணிக்கப்படுகிறது. அரசியல் என்பது வேறொரு தூண். அரசியலை விமர்சிக்கவேண்டியதும், முறைபடுத்தவேண்டியதும்தான் பத்திரிக்கைகளின் கடமை. அதற்கு அவை அரசியலுக்கு அப்பாற்பட்டுத்தான் இருக்கவேண்டும். இந்த தார்மீகம் உலகில் உள்ள ஜனநாயக நாடெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அரசியல்வாதிகளே ஜனநாயத்தின் நான்காவது தூணையும் கையில் எடுத்துக்கொண்டால் இதை இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே நான் பார்க்கிறேன். ஜனநாயத்தின் நான்காவது தூண் பலவீணப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
கட்சி ஆதரவு பத்திரிக்கைகள் ஒரு சில இடங்களில் உண்டு, ஆனால் நேரடியாக கட்சிக்காரர்களே பத்திரிக்கை நடத்தும் கூத்து, அதுவும் முன்னனி வெகுஜன பத்திரிக்கையாக தொலைக்காட்சியாக இருக்கும் அவலம், உலகத்திலேயே நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு
இதில் சன் டீ.வி. மட்டும் அல்ல, ஜெயா டி.வியும் குற்றவாளிதான். ஆனால் இந்த கட்சி சார்ந்த மீடியா கலாசாரத்தை முதலில் புகுத்தியது சன் டீ.வி என்பதை யாரும் மறுக்க முடியாது.ஜெயா டி.வி, பின்பு சன் டீவிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுதான்.
சாப்ட்வேர் தொழில் தொடங்கினால், அதற்கு நுகர்வோரை பிடிக்க சிரமப்படவேண்டியிருக்கும். ஸ்டீல் தொழில் தொடங்கினால் அதற்கும் நுகர்வோரை பிடிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். இதுபோன்ற கஷ்டங்களை படாமல், திமுககாரர்களை முதலீடாக வைத்து அவர்களை நம்பி எளிதாக தொடங்கப்பட்டதுதானே சன் டீ.வி. அதன் பின் திமுகவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபட்டதும் சன் டீவியின் நோக்கத்தில் ஒன்றுதானே?
இதுபோன்ற கட்சியின் முதலீட்டில் வளர்ந்த ஒரு தொழிலதிபரையும், ஏழையாக பெட்ரோல் போடும் பாயாக இருந்து இந்தியாவின் முண்ணனி தொழிலதிபராக வளர்ந்த அம்பாணி போன்றவர்களையும் ஒப்பிடுவதே தவறு என்று நான் எண்ணுகிறேன்.
தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியிலும் செய்தி நடுநிலயாக இருக்காது என்ற எண்ணத்தையும். ஒரு செய்தி தெரியவேண்டுமென்றால் பல தொலைக்காட்சி செய்திகளை பார்த்துவிட்டு நாமே உண்மையை ஊகித்துக்கொள்ளவேண்டும் என்ற கேலிக்கூத்து கலாசாரத்தையும் தமிழகத்தில் கொடியேற்றி வைத்தது சன் டீ.விதானே? உலகத்தில் இதுபோன்று எங்காவது இருக்கும் என்று நம்புகிறீர்களா?
ஒரு கட்சிக்காரரின் கையில் மீடியா இருப்பது, அதுவும் சிறந்த மீடியா இருப்பது, ஒரு மாநிலத்தின் மக்களையே ஒரு கட்சியின் கீழ் கொண்டுவரும் முயற்சிதானே. இது சரியா? என்பதை மட்டும் சிந்தியுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் மீடியாவில் வளர்வது, மாநிலத்திற்கு ஆரோக்கியமானது என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? நான் நம்பவில்லை. அந்த கட்சி சார்பானவர்கள் வேண்டுமானால் இந்த அவலத்திற்கு வக்காளத்து வாங்கலாம். ஒரு சாதாரண தமிழ்நாட்டு குடிமகன் என்ற பார்வையில் இதை தமிழ்நாட்டின் அவலமாகவே நான் பார்க்கிறேன்.
மற்றபடி கலாநிதி மிகப்பெரும் செல்வந்தராக வந்தது எனக்கு மகிழ்ச்சியே.இதுவே அவரின் துறை வேறாக இருந்திருந்தால் இன்னும் பெருமைகொள்ளலாம்.
நான் மேற்கூறிய கருத்துக்களில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள முடிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொள்ள முடியாதவர்கள் விட்டுவிடுங்கள்.
வாழ்த்துவது எப்படி ....?
>> Friday, November 24, 2006
அன்பு நண்பர்களே என்று தொடங்கலாமா....
அன்பு தாய்மார்களே...அருமை பெரியோரேன்னு சாலமன் பாப்பையா ஆரம்பிக்கின்ற மாதிரி இருக்கும்.....
அன்பார்ந்த நண்பர்களே....
இதுவும் அன்பார்ந்த வாக்காள பெருமக்களேன்னு அரசியல்வாதிகள்...தேர்தலின் போது கூவுற மாதிரி இருக்கும்....
அடிக்க வராதீங்க...!!
சரி நண்பர்களே... இதுவே ஓக்கே...
எப்படி வாழ்த்தினா என்ன.... மனதார வாழ்த்தினாலே போதும்....
அப்பா... எப்படியோ... நாமளும் எப்படின்னு (?) ஒன்னு போட்டாச்சி..!!!!











