கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 02

>> Monday, December 11, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

அதில் கலந்துக்கொள்ளப் போகின்றீர்களா, இது உங்களுக்கு தான்.

உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்? என்று சிந்தியுங்கள்.

நீங்க அமைச்சராக...... உங்களின் வாக்குறுதியில்...

நான் அமைச்சரானால்... சென்னைக்கும், செவ்வாய் கிரகணத்துக்கும் இடையில் பறக்கும் ரயில் விடுவேன்....

கூவம் ஆற்றின் இரண்டு பக்கமும் மல்லிகைத் தோட்டங்களை அமைத்து..... கம,கம சென்னை ஆக்குவேன்....

சென்னை மக்கள் பயணம் செய்ய குளு,குளு வசதியுள்ள பஸ் விடுவேன்.....

தமிழை செவ்வாய் கிரகணத்தின் ஆட்சி மொழி ஆக்குவேண்...

அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை மாணவர்களை, செவ்வாய் கிரகணத்துக்கு சுற்றுலா அழைத்து செல்வேன்......

குடும்ப அரசியலை நீக்குவேன்...

லஞ்சத்தையும், ஜாதியையும் ஒழித்துக்கட்டுவேன்...

என்று சும்மா புருடா விடாமல்...உங்களின் வாக்குறுதிகள் ஆக்கப்பூர்வமானதாவே இருக்கட்டும்....

**************

சரி சரி வைரமுத்துவின்... வைர வரிகளைப் பார்க்கலாம் வாங்க....

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வெண்டும் (3)

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேற்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண் மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

பழமொழி கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

(புத்தம் புது பூமி...)

யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம் இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம் சுகம் யேந்தி யேந்தி வந்து விழ வேண்டும்

போனவை அவை போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லைக் கொடுகள் அவை தேரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

(புத்தம் புது பூமி...)

**********

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

Read more...

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஐடியா - 01

>> Friday, December 08, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

பொதுவாகவே இப்படி ஏதாவது கட்டுரைப்போட்டி என்றால்... நாமெல்லாம் என்ன செய்வோம்... நம்ம அண்ணன்மார்களிடமோ, அக்காக்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ, கெஞ்சி கூத்தாடி, அந்த தலைப்பில் எழுதி தரச்சொல்லி, அதை வாங்கி மனப்பாடம் செய்து எழுதுவோம்...

சிலர் காலேஜில் படிப்பவர்களிடம் இருக்கும் கட்டுரைகள் என்ற புத்தகங்களில் இருந்து முழுசாக உருகிக்கொள்ளுவார்கள்...

கொடுமை என்னவென்றால் சிலர் "பிட்" கூட அடிப்பார்கள், இன்னும் சிலரோ "ஈ" அடிச்சான் காப்பி அடிப்பார்கள்.....

ஆனால் வெகு சிலர் மட்டும் புத்தகங்கள், பத்திரிக்கைகளை படித்தும், தொலைக்காட்சியை பார்த்தும், வானொலியில் கேட்டும், புரபஷர்கள், ஆசிரியர்கள், நாலும் தெரிந்தவர்கள், அப்பா, அம்மா, நண்பர்கள் இப்படி சிலரிடம் விவாதித்தோ... கிடைத்த சில பாயிண்டகளை வைத்துக்கொண்டு சொந்தமாக, சிந்தித்து எழுதி வெற்றி பெறுவார்கள்.....

அடுத்தவர்களின் கருத்துக்கள் எவ்வளவு தான் சிறப்பாக இருந்தாலும் அதை பின்பற்றாமல், தங்களின் சொந்த நடையில் எழுதி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்...

************

நண்பர் லக்கி லுக்குடன் பேசிக்கொன்டிருக்கும் போது..... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சட்டமன்றம்/அவை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ளாது குறித்து சில வித்தியாசமான கருத்தை சொன்னார்.... என்னை சிந்திக்க வைத்த சில கருத்துக்கள்....

1. வெறுமனே சட்ட சபைக்கு போய் பாக்கு மென்று விட்டு வந்தால் எந்த பிரயோசனமும் இல்லை.

2. ஒரு சிறந்த எம்.எல்.ஏ. மக்களோடு பழகி அவர்களது பிரச்சினைகளை அறிந்தால் மட்டுமே அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியும். இதற்காக சட்டமன்றத்துக்கு சென்று வாதம் புரிய தான் வேண்டும் என்பதில்லை.

3. நான் சட்டமன்றத்துக்கு போவது தவறென்றோ, போகாதது நல்லதென்றோ சொல்லவில்லை. சட்டமன்றத்துக்கு போகாதது பெரிய குற்றமெல்லாம் இல்லை என்றே சொல்லவருகிறேன்.

4. வாரத்துக்கு ஒரு முறை எம்.எல்.ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து மனுக்கள் வாங்க வேண்டும். தொகுதியில் சிறு சிறு பிரச்சினைகளோ அல்லது ஏதேனும் பெரிய விபத்துக்களோ ஏற்பட்டால் ஸ்பாட்டுக்கு உடனே செல்ல வேண்டும். அதிகாரிகளுடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். தன் தொகுதியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்பில் இருக்க வேண்டும்.

5. சட்டசபைக்குப் போகவில்லையென்றால் கவனஈர்ப்பு தீர்மானம், உரிமை மீறல் பிரச்னை, வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கல், கேள்வி/பதில் --- இவற்றில் பங்கேற்பது/பதிலளிப்பது இல்லமல் போய்விடும். மேலும் பங்களிப்பு முற்றிலும் இருக்காது.

************

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

Read more...

வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

>> Tuesday, December 05, 2006

தமிழ்நாடுடாக்.காம் என்ற இணையதளம் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது.

கல்லூரி மாணவர் என்றில்லை +2 முடித்து அஞ்சல் வழியாக படித்துவரும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு இந்தச் செய்தியை தெரியப்படுத்தி போட்டியில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தலைப்பு: உங்களுக்கு அமைச்சராவதற்கு ஒரு சந்தர்ப்பம் தந்தால் எந்த துறையைத் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்கள் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? எப்படி அத்துறையை முன்னேற்றுவீர்கள்?

கட்டுரை A4 அளவிலான தாளில் 5 முதல் 8 பக்கங்கள் வரை இருக்கலாம்.

போட்டியில் பங்கேற்போர் ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், விலாசம், பிறந்த தேதி, ஆணா-பெண்ணா, படிக்கும்/படித்த துறை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கட்டுரையோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மார்ச் 31, 2007

வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் தேதி : ஏப்ரல் 14, 2007 (தமிழ்ப் புத்தாண்டு)

பரிசுகள்:
முதலாவது: ரூ25,000
இரண்டாவது: ரூ10,000
மூன்றாவது: ரூ5,000
ஆறுதல் பரிசுகள்: தலா ரூ2,000 (20 பேருக்கு)

அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்:
Tamilnadutalk.com
No. 67 - 5th Lane,
Chennai-600 039
தொலைபேசி இலக்கம்: 044-45561101

இதற்க்கான முழு விபரத்திற்கு கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=4503

மேலும் இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய, மேற்கண்ட லிங்க்கை உங்களின் பிளாக் மற்றும் ஈ.மெயிலில் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இது அனைத்து கல்லூரி மாணவர்களையும் சென்றடைய ஏதோ என்னாலான உதவி.

Read more...
counter