வடமாநில தொழிலாளர்கள் Vs தமிழர்கள்

>> Monday, May 18, 2020


உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் - தமிழகம் (வேதனை பதிவு) #வடமாநில_தொழிலாளர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள்...

இதுதான் சரியான சமயம்.. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்....

தமிழக தொழில்துறையின் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி, தொழில் துறையை தமிழர்கள் கைவசப்படுத்த வேண்டும்...

என்பதாய் ஒரு அன்பர் வெளியிட்டிருந்த காணொளி பதிவை காண நேர்ந்தது....

மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது அந்த பதிவு...

ஆட்கள் பற்றாக்குறையாலோ, வெகு திறமையானவர்கள் என்பதாலோ வட இந்திய தொழிலாளர்களை தமிழகம் சுவீகரித்துக்கொள்ளவில்லை....

தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் உழைக்க தயாரில்லை. வடஇந்திய தொழிலாளர்கள் வாங்கும் கூலியை போல இருமடங்கு கூலி வேண்டும்...

ஆனால்... வேலை நேரத்தில் எவ்வளவு தூரம் நழுவ முடியுமோ அப்படி நழுவி நேரம் கடத்த வேண்டும்....

தினக்கூலிக்கு வேலைக்கு கூப்பிட்டால் ஒருநாள் வேலையை மூன்றுநாளுக்கு இழுக்க வேண்டும்..

அதுவே இரண்டு ஆள் செய்து முடித்துவிட கூடிய வேலைக்கு ஐந்து ஆள் கூலி பேசி, மூன்று பேராக வந்து அரைநாளிலேயே வேலையை முடித்து விடலாம்.. என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்....

தனியாரிடம் வேலைக்கு போனால் உழைத்தே ஆகவேண்டும்.. அதைவிட ஏரிக்கரையிலேயோ , புளியமரத்தடியிலேயோ உட்கார்ந்தோ/படுத்தோ கதை பேசி நேரம் கடத்தும் 100 நாள் வேலைக்கு போனால் போதும்.... என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்...

அட்வான்ஸாக காசு வாங்கிக்கொண்டோ, ஏதாவது சாமான் வாங்கணும் என்று சொல்லி பணம் வாங்கிக்கொண்டோ கட்டிங் போட்டு மட்டையாகி, வேலை கொடுப்பவரை அலைய விடும் உழைக்க தயாரில்லாத கொத்தனார்கள், ஆசாரிகள், எலெக்ட்ரீஷியன்கள், மெக்கானிக்குகள் ஒரு பக்கம்...

எல்லாவிதத்திலும் #நேர்மையையும் , #ஒழுக்கத்தையும் #தொலைத்துவிட்ட #தமிழக #தொழிலாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடங்களில்தான் வடமாநில தொழிலாளர்கள் தங்களை பொருத்திக்கொண்டார்கள்....

அவர்கள் என்னவோ தமிழக வேலைவாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதாய் எப்படி நாக்கூசாமல் சொல்ல முடிகிறது??

உங்களிடம் இருந்து அவர்கள் பிடுங்கவில்லை.... நீங்கள் இலவசங்கள் பின்னால் ஓடுவதற்காகவும், கட்டிங்அடித்து மட்டையாகவும், சம்பாதிக்கவும் தடை என்று நினைத்து தூக்கி வீசிய "உழைப்பை" அவர்கள் துடைத்து எடுத்து தன்வயமாக்கி கொண்டார்கள்...

Note : Forwarded Message. Thanks to the Unknown Writer.

0 comments:

counter