திரைப்பட கதை விவாதத்திற்கு எப்படிப்பட்ட நபர்களை பயன்படுத்த வேண்டும்

>> Friday, December 19, 2025


புதிய சிந்தனை உள்ள குறும்படம் இயக்கிய இளைஞர்கள் ஓரிருவர் வைத்துக்கொள்வது அவசியம்

சுமார் பத்து திரைப்படங்களுக்கு மேல் இணை, துணை உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவமிக்க சிலர்

வெற்றியோ தோல்வியோ ஓரிரு படங்களை இயக்கிய இயக்குனர்கள் சிலர், ( இவர்கள் எடுத்த படமும் பலரிடம் பணிபுரிந்த அனுபவமும் நமக்கு பாடமாக அமையும் )

வலை இதழ்களில், பத்திரிகைகளில் சிறுகதைகள்,கவிதைகள், நாவல்கள் எழுதிய அல்லது புத்தகங்கள் வெளியிட்ட ஒருவர்

மேற்கண்ட நபர்களில் கதை பேச வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாட்டு நடப்பு மிக நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.அதாவது செய்தித்தாள்களை தினசரி வாசிப்பவர்களாகவும், வலைதள பதிவுகளை படிப்பவர்களாகவும், யூட்யூபில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களாகவும் இருப்பது அவசியம்.

உதாரணமாக திரைப்படங்களைப் பற்றிய திறனாய்வு வீடியோக்கள் , திரைப்படங்களைப் பற்றிய செய்திகள் , வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களின் நேர்காணல்கள், திரைப்பட நடிகர்களின் நேர்காணல்கள்,வெளியூர் வெளிநாடு பயணக் குறிப்புகளை வெளியிடுபவர்களின் அனுபவங்கள் , அன்றாட அரசியல், உணவு & அரசியல் ,அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள் ,சமூகத்தில் நடைபெறும் குற்றங்கள், விழிப்புணர்வு செய்திகள் ,கலை, இலக்கியம் ,ஆன்மீகம் என்று ஒன்றுக்கு ஒன்று முரணான வேறுபட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து அப்டேட்டில் இருப்பவராக இருக்க வேண்டும்

சிறுகதைகள் நாவல்கள் படிப்பவராக, படித்தவராக இருக்க வேண்டும்

மாதத்திற்கு குறைந்தது 15ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்ப்பவராக இருக்க வேண்டும்,

கதைக்கு ரிலேட்டிவாக சமீபத்தில் எடுக்கப்பட்ட அல்லது தான் பார்த்த படங்களை சுட்டிக் காட்டும் அறிவும் சொல்லும் காட்சியில் முதலில் தனக்கு ஒரு தெளிவும் உள்ள அனுபவசாலிகளாக இருப்பது அவசியம்

நெட் பிளிக்ஸ் ,அமேசான், ஹாட் ஸ்டார், ஜீ, ஆஹா போன்ற ஓடிடி தளங்களில் குறைந்தது இரண்டு தளங்களில் சப்ஸ்க்ரைப் செய்து வீட்டில் படம் பார்ப்பவராக இருப்பது அவசியம்,

கதை விவாதங்களில் பங்குபெறும் போது கதைக்கு தேவையான கேள்விகளை கேட்பதுடன் அதற்கான தீர்வுகளையும்,காட்சிகளையும் சொல்பவராக இருப்பது அவசியம்

கதை தேவைப்படும் இயக்குனரின் மனநிலை, அவரின் தேவை, அந்த கதையில் தேவை, அந்த கதை வெற்றி பெறுவதற்கான அவசிய கேள்விகள் மற்றும் பதிலாக காட்சிகள் ஆகியவற்றை பல்வேறு விதமான உதாரணங்களை கொண்டு சொல்பவராக இருப்பது அவசியம்,

குறிப்பாக யார் இயக்குனரோ அவரை மீறி அவரது தயாரிப்பாளரை அணுகாமல் படத்தின் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு பேசுபவராக இருக்க வேண்டும்.

பேசும் கதையில் இருக்கும் கருவை திரைக்கதையை காட்சிகளை வேறு திரைப்படத்தின் கதை விவாதங்களுக்கு செல்லும் பொழுது சொல்லாதவராக இருப்பது அவசியம் ,

அதே சமயம் ஏற்கனவே அவர் வேலை பார்த்த கதைகளில் இருக்கின்ற நல்ல விஷயங்களை இந்த விவாதத்திலும் சொல்பவராகவும் இருக்கக் கூடாது,

குறிப்பாக நாம் சொன்ன காட்சி திரைக்கதையில் எழுதப்பட்டு படப்பிடிப்பு செய்யப்பட்டாலும் படம் வெளியாகும் வரை நான் சொன்ன காட்சி என்று தம்பட்டம் அடிக்காத மெச்சூரீட்டியும் தேவை,மேலும் ஒருவர் கதை பேசும் போது குறுக்கீடு செய்து பேசுபவராக இல்லாமலிருக்கும் அறிவும், பொறுமையும், பொறாமை இன்மையும் அவசியம் .

கதை பேச வந்த பிறகு எந்தவித தயக்கமும் இல்லாமல் அந்த கதைக்கான கற்பனையை தோன்றுகிற காட்சிகளை ரகசியம் காக்காமல் வெளிப்படையாக சொல்பவராக இருப்பது அவசியம்.

ஒரு கதைக்கு பணியாற்றிய தொடங்கியதும் அந்தக் கதையை ஒத்த ஏராளமான திரைப்படங்களை பார்த்து அதில் கையாளப்பட்டிருக்கும் திரைக்கதை, காட்சி அமைப்புகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தும், அந்த கதைக்கேற்ற தரவுகளை இணையத்தில் பார்த்தும், புத்தகங்களைப் படித்தும் புதிய கதையின் காட்சிகளை திரைக்கதையை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திப்பவராக இருக்க வேண்டும்.

Read more...

தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு

>> Monday, December 08, 2025

படித்ததில் பிடித்தது......(எழுதியவருக்கு நன்றிகள்...)

தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு கொடுக்கத் தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்- தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக் கொள்வார்கள்... அதன் பிறகு அவர்கள் பங்காளிகள் மட்டுமே இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும் அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துக் கொள்வதோடு சரி, மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும் பின்பு வசூலிக்கப்படும், சில சமயங்களில் வட்டியுடன்...

ஆனால் பெண்களுக்குப் பாகம் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள். நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல்களும் நீளும்...

பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக தான் இருக்கும்...

அதோடு விடுவது இல்லை...

சீமந்தம், பிள்ளைப்பேறு, பெயர் சூட்டுதல் தொடங்கி அந்தப் பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...

எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்குப் போயிருக்கும்... இதை எந்த ஆணும் கணக்குப் பண்ணி பார்த்த‌து இல்லை...

"நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்குக் கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடனை வாங்கியோ.. தமக்கு கிடைத்தச் சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வான்... நியாயமாக வரதட்சணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தைப் பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தைக் கொடுத்து விட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.

கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம் அப்படியே இருந்தாலும் அதைக் கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக் கொள்வோம் என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்...

ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை... வேறு வீட்டில் வாழப் போகும் பெண்ணுக்கு கடைசிவரைப் பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழி தான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தைப் பிரித்து கொடுத்து விட்டு விட்டால் அந்தப் பெண் ஆதரவற்றுப் போவாள்...

இவனும் எனக்குத் தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழிக் கொடுக்காமல் அந்த உறவைப் பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களைப் பாகமாய் பிரித்துக் கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டு விட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்...

(உண்மை...)

Read more...
counter